சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் இப்போது சூப்பர் ஹிட் அடித்து வருகிறது. இந்த சீரியலில் இப்போதுதான் குணசேகரன் சொத்தை பறிகொடுத்த நிலையில் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. இப்படி சீரியல் பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருவதால் இதனை பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் விரும்பி பார்க்கின்றனர். இந்நிலையில் இந்த சீரியலை பற்றி ரஜினிகாந்த் சில விஷயங்களை தன்னுடன் பகிர்ந்து உள்ளதாக இயக்குனர் திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இவர் “ரஜினி என்னை அழைத்து எதிர்நீச்சல் சீரியல் மிகவும் அற்புதமாக உள்ளது. மேலும் இந்த சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் மாரிமுத்து இப்போது ஜெயிலர் படத்திலும் நடித்து வருகிறார். அவரிடம் எதிர்நீச்சல் சீரியலை பற்றி நான் எப்போதும் கேட்டுக் கொண்டே இருப்பேன். இந்த சீரியலை ஒரு நாள் கூட தவறவிடாமல் நானும் பார்ப்பதாக ரஜினி கூறியதாக திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.