![பொங்கல் ஸ்பெஷல்: சென்னையில் இருந்து தென் தமிழகத்திற்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்!! பொங்கல் ஸ்பெஷல்: சென்னையில் இருந்து தென் தமிழகத்திற்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்!!](https://enewz.in/wp-content/uploads/2024/01/FEA-4-2-1-768x432.jpg)
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஜன. 15) சிறப்பிக்கப்பட உள்ளதால், சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி இருக்கும் பலரும் சொந்த ஊருக்கு திரும்ப தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக சிறப்பு பேருந்து மற்றும் ரயில்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை எக்மோர் to நாகர்கோவில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி இன்று (ஜன.13) மற்றும் நாளை (ஜன. 14) காலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (வ.எண்-06081) மதியம் 01.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். அதே நாளில் மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.25 மணிக்கு புறப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் (06082) இரவு 11.35 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும் என குறிப்பிட்டுள்ளனர்.
IND vs ENG டெஸ்ட் தொடர்: இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு.., முழு விவரம் உள்ளே!!