![தமிழகத்திற்கு நீர் திறந்துவிட முடியாது., காவிரி ஒழுங்காற்று உத்தரவை மீறி மேல்முறையீடு., கர்நாடக அரசு திட்டவட்டம்!! தமிழகத்திற்கு நீர் திறந்துவிட முடியாது., காவிரி ஒழுங்காற்று உத்தரவை மீறி மேல்முறையீடு., கர்நாடக அரசு திட்டவட்டம்!!](https://enewz.in/wp-content/uploads/2023/10/ff-7-3.jpg)
பொதுவாக காவேரி நீர் வரத்தால் தமிழ் நாட்டின் டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயம் பயனடைந்து வருகிறது. ஆனால் காவிரி அணையின் நீர்மட்டம் குறைவாக இருக்கிறது என கூறி தமிழகத்திற்கு நீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்திருந்தது. இதையடுத்து தமிழக அரசு வழக்கு தொடுத்த நிலையில் 10000 கன அடி நீர் திறந்து விடும் படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
Enewz Tamil WhatsApp Channel
ஆனாலும் அதை கர்நாடக அரசு மறுத்துவிட்டது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் இறுதியாக வினாடிக்கு 3000 கன அடி நீர் திறந்து விடும் படி கர்நாடக அரசுக்கு உத்தரவு விடப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் வினாடிக்கு 3000 கன அடி நீரை திறக்க முடியாது. மேலும் காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.