நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் கடுமையான வெப்ப அலையால் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த சூழலில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பீகாரின் பாட்னா மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 24 ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. இன்றளவும் வெப்பச்சலனம் அதிகமாக இருப்பதால், நாளை மறுநாள் (ஜூன் 28) வரை பாட்னா மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.