![வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காவிட்டால் அபராதமா? மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!! வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் பராமரிக்காவிட்டால் அபராதமா? மத்திய அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!](https://enewz.in/wp-content/uploads/2024/01/FEA-3-3.jpg)
பெரும்பாலான வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியில் நகர்புற வாடிக்கையாளர்களுக்கு ரூ.3000, புறநகர் பகுதி வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000, கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 என இருப்பு தொகையை நிர்ணயம் செய்துள்ளனர்.
அதேபோல் ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ போன்ற வங்கிகளும் வாடிக்கையாளர்களின் வாழ்விடங்களை அடிப்படையாக கொண்டு குறைந்தபட்ச இருப்புத் தொகையை நிர்ணயிக்கின்றனர். இந்த நிலையில் இனி வரும் காலங்களில் இருப்பு தொகை பராமரிப்பதற்கான கட்டாயம் இல்லாமல் போகலாம் என கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல், “வங்கி இயக்குனர்கள் நினைத்தால் குறைந்தபட்ச இருப்புத் தொகையை முற்றிலுமாக ரத்து செய்யலாம்.” என மத்திய இணை நிதியமைச்சர் பகவத் கிருஷ்ணராவ் காரத் தெரிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழக மக்களே…, பொங்கல் பண்டிகைக்காக அரசு செய்த சிறப்பு ஏற்பாடு…, போக்குவரத்து கழகத்தின் அதிரடி!!