ஆன்லைனில் இனி மருந்து விற்பனைக்கு தடை?? மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குனர் தகவல்!!!

0
சமீப காலமாக மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்த கூடாது என தெரிவித்து வருகின்றனர். மேலும் மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்தகங்களில் வலி நிவாரணி மாத்திரைகள் விற்கப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் மருந்து கட்டுப்பாட்டு இணை இயக்குனர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது ஆன்லைனில் மாத்திரை விற்பனையை தடை செய்ய வேண்டும் என அவர் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும் மருத்துவர்களின் பரிந்துரை இருந்தாலும் கூட ஆன்லைனில் மருந்து மாத்திரைகள் விற்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் வருவதால் இதை அரசு தடை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here