அவரை பார்க்க முடியாமல் தவிர்த்தேன்..  நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சிப் பகிர்வு!!!

0
 நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சிப் பகிர்வு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் சூப்பர் ஸ்டாராகவும் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி குறித்த சுவாரஸ்ய கருத்தை கூறியுள்ளார்.
அதில், இரட்டை இலைக்கு வாக்களித்து விட்டதால் கலைஞருடனான திரைப்படத்தின் முன் காட்சிக்கு செல்லாமல் குளிர்ஜுரம் எனத் தவிர்த்தேன். ஆனால், சூரியன் அருகில் வந்து அமருங்கள் குளிர்ஜுரம் போய்விடும் என்று தெரிவித்து தன்னை அருகில் அமர வைத்துக் கொண்டார் கலைஞர், என கூறி தனது சுவாரஸ்ய கருத்தை முடித்துள்ளார். தற்போது இவரின் கருத்து சமூக வலைத்தளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here