![என்னா மனுஷன்யா.., குக் வித் கோமாளியில் வெற்றி பெற்ற பணத்தை வைத்து மைம் கோபி செய்த காரியம் !! என்னா மனுஷன்யா.., குக் வித் கோமாளியில் வெற்றி பெற்ற பணத்தை வைத்து மைம் கோபி செய்த காரியம் !!](https://enewz.in/wp-content/uploads/2023/08/ff-5-1-768x576.jpg)
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 4 கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. இந்த சீசனில் பிரபல நடிகர் மைம் கோபி டைட்டிலை அடித்து 5 லட்சம் பரிசு தொகையை தட்டி சென்றார். அது போக இரண்டாம் பரிசை ஸ்ருஷ்டியும், மூன்றாவது பரிசை நடிகை விசித்திராவும் பெற்று சென்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் மைம் கோபி தான் வாங்கிய ஐந்து லட்சம் பரிசு தொகையை என்ன செய்ய போகிறார் என்பது குறித்து இணையத்தில் ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. அதாவது நடிகர் மைம் கோபி குக் வித் கோமாளி சீசன் 4ல் வாங்கிய ஐந்து லட்சத்தை புற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ கொடுக்க முடிவு செய்திருப்பதாக சொல்லி இருக்கிறார். இதை கேட்ட ரசிகர்கள் பலரும் அந்த மனசுதான் சார் கடவுள் என்று மைம் கோபியை பாராட்டி வருகின்றனர்.