தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று மேலும் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்திலும் அதிகரிக்கும் பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் கொரோனா வைரஸின் தாக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்நிலையில் துபாயில் இருந்து தமிழகம் வந்த ஈரோடைச் 24 வயது நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் உறுதிசெய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்து உள்ளது.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |