இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் ஏற்கனவே கொரோனா பாதித்த 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா தாக்கம் தீவிரமாக உள்ளது. இதை அடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு:
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டு ஏப்ரல் 15ம் தேதிக்கு பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அரசு கூறி இருந்தது. இந்நிலையில் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடம் தாமதமாக தொடங்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிப்பு – தமிழகத்தில் 9 பேருக்கு கொரோனா உறுதி.!
தமிழகத்தில் ஏற்கனவே 9 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |