விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகியாக நடிப்பவர் தான் ரோஷினி ஹரிப்ரியன். எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் தனது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது நயன்தாராவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ரோஷினி
தமிழ் திரையுலகை பொறுத்தவரை நல்ல அழகு நிறத்துடன் இருப்பவர்களுக்கே சினிமா துறையில் வாய்ப்பு அதிகம் கிடைக்கும் என்ற கருத்து உள்ளது. என்ன தான் நடிப்பு திறமை அதிகமாக இருந்தாலும் நிறம் கம்மியாக இருப்பதால் பலரும் நிராகரிக்கப்பட்டு வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால் இதையெல்லாம் முறியடித்து வந்தவர் தான் ரோஷினி. பாரதி கண்ணம்மா சீரியலில் தனது நடிப்பு திறமையால் பலரையும் தன் வசம் வைத்துள்ளார் என்றே சொல்லலாம். இப்பொழுது அனைவரின் விருப்பமான சீரியல் பாரதி கண்ணம்மா தான் என்று சொல்லலாம்.
அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடுத்தடுத்து அந்த சீரியலில் என்ன நடக்கும் என்று பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். இதில் நாயகியாக நடிப்பவர் தான் ரோஷினி. இவர் மாடலிங் துறையில் இருந்தவர். அதன் பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்பே பாரதி கண்ணம்மா.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
கதையம்சம் இவருக்கு ஏற்றவாறு இருப்பதால் இவரின் நடிப்பும் இதற்கு ஒத்துபோனது. ஆரம்பத்தில் மக்கள் இவரை கண்டுகொள்ளவில்லை என்றாலும் தற்போது கண்ணம்மா என்று பல ரசிகர்கள் இவரை சுற்றி வருகின்றனர். கண்ணம்மா போல தான் இருக்கணும் என்று பலரும் கூறி வருகின்றனர்.
ஆரம்பத்தில் இவரின் நிறத்தை பார்த்து பலரும் இவரை நிராகரிக்க தான் செய்தார்களாம். அவரின் விடா முயற்சியே அவரை இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது. மேலும் சீரியலில் குடும்ப பாங்காக நடித்து வரும் ரோஷினி நிஜ வாழ்க்கையில் படு மாடலாக காட்சியளிக்கிறார்.
மேலும் அந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. நம்ம கண்ணம்மாவா இது?? என அவரது ரசிகர்கள் பலரும் ஷாக் ஆனார்கள். அவர் தொடர்ந்து பல புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரோஷினி. அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.