மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்துக்குட்பட்ட நியூ ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் ரயிலின் கடைசி 3 பெட்டிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. தற்போது இந்த விபத்து தொடர்பாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் விபத்துப் பகுதிக்கு, பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளனர்.