இன்றைய காலகட்டத்தில் நகரங்களை தொடர்ந்து கிராமங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. ஆனாலும் ஒரு சில நேரங்களில் இணைய சேவை பாதிப்பால் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு டிஜிட்டல் கரன்சி (CBDC) சம்பந்தமான ஒரு பைலட் திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் ஆஃப்லைனிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யலாம் என RBI கவர்னர் சக்திகாந்த் தாஸ் அறிவுறுத்தி உள்ளார்.
தற்போது இந்த பைலட் முறை சோதனை செய்யப்பட்டு வருவதால், கூடிய விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார். அப்படி அமலுக்கு வரும் பட்சத்தில் நெட்வொர்க் பிரச்சனை உள்ள கிராமங்கள், மலைப்புற பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெரும்பாலனோர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
2ஆம் திருமணத்திற்கு தயாரான சமந்தா? மாப்பிள்ளை இவர் தானா? வெளியான மாஸ் அப்டேட்!!