தமிழும் சரஸ்வதியும் சீரியலில் மேக்னாவுக்கு எப்போது உண்மை தெரியவரும் என்பதுதான் கதையின் அடுத்த திருப்பமாக உள்ளது. இப்படி இருக்கையில் இப்போது வெளியாகிய ப்ரோமோவில் மேக்னா, தமிழ் இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஏதோ ஒரு ரவுடி கும்பல் தமிழை கொலை செய்ய வருகின்றனர். இதனால் அந்த ரவுடி கும்பலுக்கும் தமிழுக்கும் சண்டை நடக்கிறது. அந்த நேரத்தில் ஒருவர் தமிழை அறிவாவால் வெட்ட வர அதை மேக்னா குறுக்க விழுந்து தடுத்து விடுகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் அவர் கையில் காயம் ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்படுகிறார். அப்போது மேக்னா மயக்கமாக இருக்கும் நேரத்தில் தமிழ் சரஸ்வதி இருவரும் பார்க்க வருகின்றனர். அப்போது சரஸ்வதி மேக்னாவிடம் என் தாலியை காப்பாற்றி கொடுத்ததற்கு ரொம்ப நன்றி. நீங்க மட்டும் இல்லன்னா சத்தியமா என் புருஷனுக்கு என்ன நடந்திருக்கும் என நெனச்சு பாக்கவே பயமா இருக்கு என்று சொல்ல அவர் கண் முழித்து விடுகிறார். இதை வைத்துப் பார்க்கும்போது சரஸ்வதி பேசியதை மேக்னா கேட்டிருப்பாரா என்பதை அடுத்து வரும் எபிசோடை வைத்து தான் தெரிந்து கொள்ள முடியும்.