இன்றைய கால கட்டத்தில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, புத்தக கட்டணம் மட்டுமல்லாமல் பல்வேறு விதமான கட்டணங்களை நிர்வாகம் வசூலித்து வருகின்றனர். இதனால் சாமானிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் நிதி சிக்கலில் சிக்கி தவிக்கின்றனர். இந்த நிலையில் சீனாவின் குவாங்டோங் நகரில் உள்ள மழலையர் தனியார் பள்ளி, தங்களது மாணவர்கள் மதிய உணவிற்கு பிறகு தூங்குவதற்கு கட்டணங்களை நிர்ணயித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதன்படி குழந்தைகள் மேஜையில் தலை வைத்து தூங்க இந்திய மதிப்பில் ரூ.2,275, தரையில் தூங்க ரூ.4,049, பெட்டில் தூங்க ரூ.7,856 என கட்டண விவரங்களை பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி உள்ளனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களிலும் பள்ளி நிர்வாகத்தின் மீது பல்வேறு விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.., மீனவர்கள் கடலுக்கு செல்ல எச்சரிக்கை!!!!