![வங்கி ஊழியர்களுக்கு இந்த மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்? பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா!!! வங்கி ஊழியர்களுக்கு இந்த மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்? பரபரப்பான அறிவிப்பை வெளியிட்ட கர்நாடகா!!!](https://enewz.in/wp-content/uploads/2023/09/FEA-81-696x522.jpg)
பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஒரு சில நேரங்களில் வங்கி அலுவலரை தொடர்பு கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் ஒரு சில வங்கி ஊழியர்களுக்கு உள்ளூர் மொழி தெரியாததால், பலருக்கும் தகுந்த தீர்வு கிடைப்பதில்லை. குறிப்பாக இது போன்ற சிக்கல்களை கிராமப்புற மக்கள் அடிக்கடி எதிர்கொள்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை கருத்தில் கொண்டு கர்நாடகாவில் வங்கி ஊழியர்களுக்கு கன்னட மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையா விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். கன்னடம் பேசாத ஊழியர்களுக்கு, அடிப்படை கன்னட மொழி கற்பித்தலை வழங்கவும் உத்தரவிட உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் காத்திருக்கின்றனர்.
பள்ளி மாணவர்களே., இனி வகுப்பறையில் பெட்டில் படுத்து உறங்கலாம்? புதிய கட்டண வசூலில் தனியார் பள்ளி!!!