வரும் செப்டம்பர் 15ம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை அரசு தொடங்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, தகுதியான குடும்பத் தலைவிகளை தேர்வு செய்து, ரூ.1000 வழங்குவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர். இந்நிலையில், தகுதி உடைய பெண்களில் உரிய ஆவணங்கள் இல்லாதோருக்கும் மகளிருக்கான உரிமை தொகையை வழங்குவது குறித்த முக்கிய அறிவிப்பை சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் தாரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அதாவது, வங்கி கணக்கு மற்றும் பான் கார்டு இல்லாத, ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்காத பயனாளிகளுக்கு புதிததாக அஞ்சல் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு மகளிருக்கான உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அனைத்து பெண்களுக்கும் உரிமை தொகை கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என செயலாளர் தாரேஸ் அகமது கூறியுள்ளார்.
தமிழ்நாடு மீனவர்களுக்கு ஜாக்பாட்., நிவாரண தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு!!!