ஜஸ்பிரித் பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து T20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இன்று துவங்கியுள்ள முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கான பிளேயிங் 11ல் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், புதிதாக பிரசித் கிருஷ்ணா மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் அறிமுகமாகி உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இப்போது, அயர்லாந்துக்கு எதிராக முதல் ஓவரை வீசிய பும்ரா முதல் பந்தில் 4 ரன்களைக் கொடுத்து அடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். காயத்திற்காக சிகிச்சை பெற்று நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் பும்ராவின் இந்த வேகம் அணிக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.