குஜராத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசியாக தனது சொந்த மண்ணில் விளையாட உள்ள போட்டியில், மாற்று ஜெர்சியை அணிய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல்:
இந்தியன் பிரீமியர் தொடரில், நடப்பு சாம்பியன் அணியாக திகழும் குஜராத் டைட்டன்ஸ் ஆரம்ப முதலே தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இந்த அதிரடியான ஆட்டத்தால், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணியானது, இதுவரை விளையாடி 11 போட்டிகளில் 8 ல் வெற்றி 3ல் தோல்வி அடைந்து 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன் மூலம், பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக, குஜராத் டைட்டன்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஐபிஎல் தொடரில் மீதம், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளை எதிர்த்து, மே 12, மே 15 மற்றும் மே 21 ஆகிய தேதிகளில் விளையாட இருக்கிறது.
போண்டாமணி மகள் +2வில் இவ்வளவு மதிப்பெண்ணா? தயாரிப்பாளர் கொடுத்த சர்ப்ரைஸ்!!
இதில், குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில், கடைசியாக விளையாட உள்ள போட்டியில், குஜராத் அணி புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்க லாவெண்டர் நிற கிட்களை அணிய உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.