கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்ட நிலை இருப்பதால் சென்னை உட்பட சில பகுதிகளில் அணைத்து மதுபான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் குடிபோதையில் காவலர்கள் இருவரை ஊராட்சி மன்றத் தலைவர் – தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
காவலர்களை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர்
![காவால்டர்களை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர்](https://enewz.in/wp-content/uploads/2020/06/fight-300x225.jpg)
திருவள்ளூர் மாவட்டம் அருமந்தை கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமன். அந்த கிராமத்தில் 2 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன.ஊரடங்கள் மதுகடைகள் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் விக்ரமனும் அவரது நபர்களும் கிராமத்தில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்திருக்கிறார்கள்.அப்பொழுது அந்த பகுதிக்கு ரோந்து வந்த சோழவரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் நீலமேகம் ஊர்க்காவல் படை வீரர் கணேசன் மது அருந்தி கொண்டிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு கூறியுள்ளார்.
ஆனால் அதை கேக்காமல் வாக்குவாதம் ஏற்பட்டு காவலர்கள் இருவரையும் அடித்து தள்ளியதில் காவலர் நீலமேகம் கை எலும்பு முறிந்து படுகாயம் அடைந்தார்.இதையடுத்து காயமடைந்த காவலர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் காவலரை தாக்கிய தகவலறிந்த பொன்னேரி காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக அருமந்தை ஊராட்சி மன்ற தலைவர் விக்ரமன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சோழவரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.