தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற பிற மாநிலங்களிலும் அவ்வப்போது மின்சார உயர்வு குறித்த குறித்த அறிவிப்பு வெளியாகி வண்ணம் உள்ளது. இதனால் சமீபத்தில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவில் மின்சார உயர்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மக்கள் பலரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் தான் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது வீடுகளில் சோலார் அமைத்தால் அவர்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
தற்போது இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிலையில் இனி வரும் நாட்களில் நாடு முழுவதும் எந்தெந்த வீடுகளில் சோலார் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறதோ அவர்களுக்கு 300 யூனிட் இலவசமாக மின்சாரம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் இத்திட்டத்திற்காக ரூபாய் 75 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.