தமிழகத்தில் பண்டிகை உள்ளிட்ட விசேஷ தினங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வருகிற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், அன்றைய தினம் திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.
அதேபோல் குடியரசு தினம் (ஜன.25) மற்றும் வடலூர் ராமலிங்கர் நினைவு தினம் (ஜன.26) என இம்மாதத்தில் (2024 ஜனவரி) மூன்று நாட்களுக்கு திருப்பூரில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நாட்களில் மாவட்டத்திற்குட்பட்ட மதுபான கடையோ, பார்களோ செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
TNUSRB PC தேர்வு முடிவுகள் வெளியீடு.., உடனே செக் பண்ணுங்க.., முழு விவரம் இதோ!!!