தமிழகத்தில் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்போது கடலூர் மாவட்டம் நத்தப்பட்டு துணை மின் நிலையங்களில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
நெல்லிக்குப்பம் மாருதி நகர்,தேவனாதன் நகர், தந்தை பெரியார் தெரு, ஜானகிராமன் காலனி, கல்கி நகர், வள்ளலார் நகர், நடேசன் தெரு, பெரிய தெரு, நகராட்சி அலுவலகம்,திரு.வி.க.நகர், அண்ணாநகர், முஸ்லிம் மேட்டு தெரு, தமிழ்கருமார வீதி,பாரதியார் வீதி,மெயின் ரோடு அண்ணா சிலை முதல் வாணியர் மஹால் வரை.