தீபாவளியையொட்டி மாநில அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.,, வெளியான சூப்பர் அறிவிப்பு!!

0
தீபாவளியையொட்டி மாநில அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.,, வெளியான சூப்பர் அறிவிப்பு!!

சமீப காலமாக மாநில அரசுகள் ஒவ்வொன்றாக அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு எந்தெந்த மாநிலங்கள் ஊழியர்களுக்கு DA-வை உயர்த்தி உள்ளது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்

DA உயர்வு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல மாநிலங்கள் அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வை ஒவ்வொன்றாக அறிவித்து வருகின்றன. அந்த வகையில் பஞ்சாப் மாநில அரசு, தனது அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைப்பதாகவும், அகவிலைப்படியை (டிஏ) உயர்த்துவதாகவும் அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக பஞ்சாப் அரசு இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 6 % அகவிலைப்படியை உயர்த்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதை தொடர்ந்து உத்தரபிரதேச அரசு, ஜூலை 1 முதல் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 38% ஆக உயர்த்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் தீபாவளி பரிசாக, மாநில அரசு ரூ. 6,908 போனஸ் வழங்கவும் முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஹரியானா அரசு 7வது ஊதியக் குழுவின் கட்டமைப்பின் படி சம்பளம் பெற்று வரும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1, 2022 முதல் அகவிலைப்படியை (DA) 4% உயர்த்தி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கேபிள் சேவைக்கு தடை – மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை! பொதுமக்கள் உச்சகட்ட ஷாக்!!

தொடர்ந்து சத்தீஸ்கர், மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) 5% ஆக உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு அக்டோபர் 2022 முதல் அமலுக்கு வரும். இதையடுத்து ஜார்க்கண்ட் அரசு , மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் (டிஆர்) 4% உயர்த்த முடிவு செய்துள்ளது. மேலும் மத்திய அரசின் முடிவுக்கு இணங்க, தில்லி அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4% உயர்த்தி உத்தரவு பிறப்பித்தது.

மத்திய அரசின் அறிவிப்புக்கு பிறகு, ராஜஸ்தான் அரசு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த ஒப்புதல் அளித்தது. இது ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் செப்டம்பரில், ஒடிசா அரசு அதன் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி அறிவித்தது. இதனால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன்பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here