கொரோனா கடைசி நிலையில் உயிர் காக்க பயன்படும் மருந்து ரெம்டெசிவிர்.தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்துக்காக பெரும் கூட்ட நெரிசல் எப்போதும் காணப்படும் .அதை தடுக்க தமிழக அரசு இணையதளம் ஒன்றை துவங்கியுள்ளது.
கொரோனாவை குணப்படுத்தும் மருந்து – ஆந்திராவில் அலைபாயும் மக்கள்
ரெம்டெசிவிர் மருந்து பெற இணையதளம் :
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில் ரெம்டெசிவிர் மருந்து அவசியமும் அதிகமாகி வந்தது.இதனால் எப்போதும் பெரும் கூட்ட நெரிசல் காணப்படும்.மக்கள் அதிகமாக கூட்ட நெரிசலில் ஈடுபடுவதால் நோய் தொற்று பரவும் ஆபத்து அதிகம் உள்ளது என்பதால் சென்னை மட்டுமல்லாது கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் ரெம்டெசிவிர் விற்பனை மையங்கள் துவங்கினர்.தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
![ரெம்டெசிவிர் மருந்து பெற இணையதளம் :](https://enewz.in/wp-content/uploads/2021/05/remdisivir-1-300x196.jpg)
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
எனவே தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்து பெற மருத்துவ பணிகள் கழகம் சார்பில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.tnmsc.tn.gov.in என்ற இணையதளத்தில் தனியார் மருத்துவமனைகள் விண்ணப்பித்து ரெம்டெசிவிர் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் சிலர் ரெம்டெசிவிர் மருந்துகளை வாங்கி கள்ள சந்தையில் விற்பனை செய்கின்றனர்.அவ்வாறு விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் வழக்கு தொடுத்து வருகின்றனர்.