உலகம் முழுவதும் வழக்கத்திற்கு மாறாக காலநிலை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கடுமையான வெயிலாலும், மழை வெள்ளத்தாலும் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 122 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் பருவமழை குறைந்து வறட்சி அதிகரித்துள்ளது. அரிசி, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வும் உச்சத்தை தொட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் உணவு பொருட்களின் ஏற்றுமதிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து வருகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும் உணவு பொருட்களின் விலை ஏற்றத்தை பொதுமக்கள் சிறிதளவு எதிர்கொள்ள வேண்டி வரும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று (செப்டம்பர் 4) இடி மின்னலுடன் கனமழை? வானிலை மையம் அலெர்ட்!!!