இந்தியாவில் தீபாவளி பண்டிகையை தீப ஒளி திருநாளாக பொது மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்த தீபாவளியை மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து சிறப்பாக கொண்டாடுவதற்காக, தொழிலதிபர்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ் அல்லது முன்பணம் வழங்குவது வழக்கம்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த வகையில், கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தேயிலை தோட்டத்தில் சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு, வரும் தீபாவளிக்கு முன் பணமாக, ரூ. 3,500 வழங்கப்பட உள்ளதாக எஸ்டேட் நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 6,500 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதனை, தீபாவளி பண்டிகைக்கு முன்பாக வழங்கவில்லை என்றால் மாநில அளவிலான போராட்டம் நடத்துவோம் என தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு வழக்கு விசாரணை., அமலாக்கத்துறைக்கு அதிரடி உத்தரவு!!!