நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மத்திய அரசு அந்த்யோதயா ரேஷன் கார்டு வழங்கியுள்ளது. இந்த வைத்துள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ப அதிகபட்சமாக 35 கிலோ அரிசி வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என கடந்த சில நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர்.
தற்போது இதை தொடர்ந்து மத்திய அரசு அந்த்யோதயா ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களும் கைரேகையை பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் ரேஷன் கடை அதிகாரிகள் வீட்டிற்கு சென்று குடும்ப அட்டைதாரர்களின் கை ரேகையை பதிவு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து தற்போது ரேஷன் கடை ஊழியர்கள் இதற்கான பணிகளில் களமிறங்கியுள்ளனர்.