குழந்தைகள் கண் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து., வெளியான அதிர்ச்சி தகவல்!!
டெல்லி லஜ்பத் நகர் பகுதியில் உள்ள ஐ7 குழந்தைகள் கண் மருத்துவமனையில் மின் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்த பணியாளர்கள் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினர். விபத்து குறித்து அறிந்த தீயணைப்புத்துறையினர் 12 வாகனங்களில் வந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து பரவிய தீ கட்டுக்குள் வந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து மூலம் ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை, அதிகாரிகள் சோதனையிட்டு வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
TNPSC தமிழ் – இலக்கணம் முக்கிய வினாக்கள்