தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து 2022 டிசம்பரில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பதவி பிரமாணம் செய்யப்பட்டார். இந்த நிலையில் வருகிற 21ஆம் தேதி இளைஞரணி மாநாடு முடிந்த பிறகு துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது முன்னாள் முதல்வர் கருணாநிதி பாணியில் “எல்லா அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக தான் இருக்கப் போகிறோம்.. அவ்ளோதான்” என உதயநிதி கூலாக பதிலளித்து விட்டு நகன்று விட்டார். இருந்தாலும் பட்டும் படாமல் பதிலளித்து சென்றது பலர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
சுற்றுலா பயணிகளுக்கு குட் நியூஸ்.., இந்த அருவிகளில் இனி நீராடலாம்.., வெளியான அறிவிப்பு!!!