பிரபல நடிகரான பப்லு ப்ரித்விராஜ் பல ஹிட் படங்கள், சீரியல்களில் நடித்து பிரபலமானவர். மேலும் சிறந்த டான்சரும் கூட. பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று அசத்தியுள்ளார். இப்பொழுது இவருக்கு 55 வயதான நிலையில் 23 வயதான ஷீத்தல் என்பவரை காதலித்து வருகிறார்.
இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது. இப்படி இருக்கும் சூழ்நிலையில் பலரின் பேச்சுக்கு ஆளாகியுள்ளார். மேலும் சன் டிவியில் கண்ணான கண்ணே என்ற சீரியலில் நடித்து வந்தார். அந்த சீரியலும் இப்பொழுது முடிவுக்கு வந்த நிலையில், அடுத்து வாய்ப்பில்லாமல் தவித்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் கோபி விலகுவது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்நிலையில் தான் அவருக்கு பதிலாக பப்லு ப்ரித்விவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். கதையோடு அவரது வாழ்க்கையும் ஒன்றி இருப்பதால் இந்த கதாபாத்திரத்தில் இவர் நடிக்க சரியாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.