இந்தியா- சீனா இடையே நடந்த எல்லை பிரச்சனையால் ஏற்பட்ட தாக்குதலில் வீர மரணம் அடைந்தனர். இதனால் 9.50 லட்சம் கொடியிலான சீனா பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
லடாக் தாக்குதல்
இந்திய – சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. லடாக்கில் நடந்த எல்லை பிரச்சனையால் ஏற்பட்ட தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
வீர மரணம் அடைந்த வீரர் குடும்பத்திற்கு 1 கோடி நிதி வழங்குக – பொது மக்கள் வலியுறுத்தல்..!
சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இதனால், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
சீனா பொருட்கள்
இதனால் இந்தியாவில் சீனா பொருட்களை புறக்கணிக்க நாடு முழுவதும் குரல் எழுப்பி வருகின்றனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
மேலும் சீனாவில், இருந்து வரும் பொம்மை, பிளாஸ்டிக் பொருட்கள், விளையாட்டு கருவிகள் ஆடைகள், மின்னணு சாதனங்கள் உட்பட 9.50 லட்சம் கோடி மதிப்பிலான 371 பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Too late