கொரோனா பாதிப்பால் மக்கள் அனைவரும் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிகுறிகள் மற்றும் நோய் தோற்று உள்ளவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்துபவர்களுக்கு போதிய இடம் இல்லாத பட்சத்தில் ரயில்கள் கொரோனா வார்டாக மாற்றப்பட்டது.
கொரோனா வார்டு
இந்தியாவில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாவட்டங்களில் நோய் தோற்று அதிகமாக உள்ளது.
மேலும் கொரோனா பாதிப்புகளால் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக சிறப்பு படுக்கை வசதிகளை கொண்ட ரயில் பெட்டிகளை டெல்லி அரசின் வேண்டுகோளுக்கு இணங்க ரயில்வே வாரியம் அனுப்பியது. இது தனிமை படுத்தப்படுபவர்களுக்கு போதாத பட்சத்தில். ரயில் சிறப்பு பேட்டிகள் அனைத்தும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது.
ரயில் வார்டு
அதன் மூலம் பல நோயாளிகள் தனிமைப்படுத்தப் பட்டனர். ரயில்வே சார்பில் 5,321 ரயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் டெல்லியில் சுமார் 20 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லி அரசின் வேண்டுகோளை அடுத்து 160 படுக்கைகளைக் கொண்ட 10 ஏ.சி. இல்லா பெட்டிகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும், ஏ.சி. வசதியுடனான ஒரு பெட்டி மருத்துவர்கள் உள்ளிட்டோரின் ஓய்வறை பயன்பாட்டுக்காகவும் அனுப்பப்பட்டுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |