ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரில், மூன்று முன்னணி கதாபாத்திரங்கள் இணைய உள்ளதால், இனி வரும் காட்சிகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
சூடு பிடிக்கும் காட்சிகள் :
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று செம்பருத்தி. கிராமத்து இளம் பெண்ணான பார்வதி, எப்படி ஆதி கடவூர் அகிலாண்டேஸ்வரியின் மூத்த மருமகள் ஆகின்றார் என்பதே இந்த சீரியலின் கதைக்கரு. தொடர்ந்து, இந்த சீரியல் பலகட்ட நகர்வுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், இந்த சீரியலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, சீரியல் டீம் முடிவு செய்துள்ளது.
அதாவது, ஜீ தமிழின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியலில் நடித்த விஷ்ணு உன்னிகிருஷ்ணன், யாரடி நீ மோகினி சீரியல் நடித்த யமுனா மற்றும் கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான சிவகாமி தொடரில் நடித்த பிரிதா ரெட்டி ஆகியோர் இந்த தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் சீரியல், புதுப்பொலிவுடன் அடுத்த கட்டத்திற்கு செல்ல உள்ளதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்