ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது செம்பருத்தி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் 1000வது எபிசோடை கடந்து வெற்றி விழாவை கொண்டாடி வருகின்றனர்.
ஜீ தமிழ்
விஜய் டிவிக்கு நேரெதிர் போட்டி என்றால் அது ஜீ தமிழ் தான். அதாவது தொடர்ந்து பல சீரியல்கள் நிகழ்ச்சிகள் என களமிறக்கி இரண்டு சேனல்களும் போட்டியிட்டு வருகின்றனர். விஜய் டிவியை பொறுத்தவரை எப்பொழுதுமே டாப் தான். ஜீ தமிழ் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. ஜீ தமிழில் தற்போது யாரடி நீ மோகினி, செம்பருத்தி, சத்யா, ராமன் தேடிய சீதை போன்ற சீரியல்கள் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது.
அந்த வகையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் செம்பருத்தி. வீட்டில் வேலை பார்ப்பதற்காக வந்த பெண் அந்த அந்த வீட்டின் முதலாளி ஆதியை காதலித்து திருமணம் செய்துகொள்வார். இதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான் கதையின் மையக்கரு. இதில் ஆதியாக நடிக்கும் கார்த்தி மக்கள் மத்தியில் அதிக பிரபலமானார். இவருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசையாம். அதனால் தான் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்ததும் இந்த சீரியலை விட்டு விலகி விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு புதிய ஐடியாவை தரும் கதிர் – புறக்கணிக்கும் மூர்த்தி ஜீவா!!
மேலும் பார்வதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷபானாவுக்கும் ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்பு உள்ளது. அகிலாண்டேஸ்வரியின் ஆதிக்கம் தான் சீரியலின் முக்கிய கதையே. இந்நிலையில் இந்த சீரியல் இவர்களின் நடிப்புக்கு மத்தியில் 1000 எபிசோடை கடந்து சாதனை புரிந்துள்ளது. இதனால் செம்பருத்தி சீரியல் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு இந்த 1000 வது எபிசோடு லைவ்வில் வர போகிறார்களாம்.