
தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் யூடியூப் மூலம் எக்கசக்க பேர் பேமஸ் ஆகி வருகிறார்கள். அதில் மிகவும் முக்கியமானவர் தான் இந்த டிடிஎப் வாசன். உயர்தர இருசக்கர வாகனங்களை வைத்து இவர் செய்யும் சாகசங்கள் பலராலும் எதிர்க்கப்பட்டது. அந்த வகையில் சமீபத்தில் வீலிங் செய்ய முயன்று விதிப்பதில் சிக்கினார். ஆனால் அந்த விபத்து அவர் வாழ்க்கையை புரட்டிப்போடும் என்று நினைத்திருக்க மாட்டார். அந்த விபத்து குறித்து அவர் மீது 4 சட்டத்திற்கு கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
மேலும் 10 ஆண்டுகள் அவரை ஓட்டுநர் உரிமத்தை தடை செய்ததும், கிட்டத்தட்ட 45 நாட்களுக்கு சிறையில் அடைக்க காஞ்சிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்த டிடிஎப் வாசனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது டிடிஎப் வாசனின் யூடியூப் சேனலை காஞ்சிபுரம் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவரின் வீடியோவை பார்த்து இளைஞர்கள் தவறான பாதைக்கு போய் விடக்கூடாது என்பதற்காக நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.