கந்த சஷ்டி கவசத்தை இழித்து கூறிய கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை முடக்க கோரி தமிழ்நாடு குற்ற பிரிவு போலீசார் யூ டியூப் செயலிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர்.
இழித்து பேசிய கறுப்பர் கூட்டம்:
கடந்த சில நாட்களுக்கு முன்னால், கறுப்பர் கூட்டம் என்னும் யூ டியூப் சேனலை சேர்ந்தோர் இந்துக்களின் புனித கடவுளான முருகனை துதித்து கூறும் கந்த சஷ்டி கவச பாடலை அவதூறு பரப்புப்பும் விதமாக பேசி வந்தனர்.
அதில் அவர்கள், இந்த பாடல் ஒரு ஆபாச புராணம் என்றும் மேலும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தனர். இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. அதனால், பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அதன் பெயரில் இவர்கள் மேல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைதும் செய்தனர். ஆனாலும், பலர் இவர்களுக்கு எதிராக கோஷமிட்டு வந்தனர்.
ஏன் முடக்க கூடாது??
இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூட்யூப் சேனலை முழுவதுமாக முடக்க சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சேனலை முடக்க யூட்யூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.