இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த திரைப்படத்தில் நடிகை மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா, மோகன் ராஜா, மகிழ்திருமேனி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவு பெற்று நீண்ட நாட்கள் ஆகியும் திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படத்தை வரும் மே 19 ஆம் தேதியன்று ரிலீஸ் செய்ய இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
‘போர் தொழில்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்….,இது தான் கதையா….,
இந்த நிலையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்துள்ளது படக்குழு. அந்த வகையில், இத்திரைப்படத்தில் நடிகை ரித்விகா, கன்னிகை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளாராம். அதே போல, ஆறுமுகம் என்ற கதாப்பாத்திரத்தில் கரு.பழனியப்பன் மற்றும் மதுரா என்ற கதாப்பாத்திரத்தில் நடிகை ஜெசி நடித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.