யாஷிகா ஆனந்த் தலையில் விழுந்த அடுத்த இடி.. பாயும் போலீஸ் நடவடிக்கை!!

0

நடிகை யாஷிகா ஆனந்த் சில நாட்களுக்கு முன் மோசமான கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரது தோழி பவானி உயிரிழந்த நிலையில் யாஷிகா உட்பட காரில் இருந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

தற்போது யாஷிகாவிற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர் குணமாக 3 மாதங்கள் வரை ஆகலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. போலீசாரிடம் இவர் அளித்த வாக்கு மூலத்தில் தான் கார் ஒட்டி வந்ததாக உறுதிபடுத்தியுள்ளார். இதையடுத்து போலீசார் யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே கார் விபத்தில் சிக்கிய யாஷிகா, தற்போது மீண்டும் அது போன்ற விபத்தை ஏற்படுத்தியதால் போலீசார் இவரின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்து உள்ளனர். இந்த வழக்கின் விசாரணைகள் தீவிரப்படுத்தபடும் பொழுது யாஷிகா ஆனந்த் கைது செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து குறித்து விசாரணைகளை துரிதப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here