தமிழில் வெளியான இருட்டு அறையில் முரட்டு கூத்து படத்தின் மூலம் அறிமுகமான யாஷிகா ஆனந்த். தற்போது படவாய்ப்புக்காக பல போட்டோஷூட் நடத்தி வரும் யாஷிகா தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கடற்கரையில் குட்டியான உடையில் நின்றவாறு அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.
யாஷிகா ஆனந்த்
தமிழில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் யாஷிகா ஆனந்த். இவர் இருட்டு அறையில் முரட்டு கூத்து படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது 18 வயது தானாம். ஆனால் இவரை பார்க்கும்போது யாருக்குமே அப்படி தெரியவும் இல்லை. இந்நிலையில் அவருக்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பையும் பெற்று வந்தார். ஆனால் நாளடைவில் அவரின் செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
காதல் என்ற பெயரில் இவரும் மகத்தும் அடித்த கூத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யாவும் யாஷிகாவும் என்ன தான் அராஜகம் செய்தாலும் அவர் பிக் பாஸ் வீட்டில் அனைத்து போட்டிகளிலும் திறமையாக தான் விளையாடினார். மேலும் அவர் வீட்டை விட்டு வெளியேறிய போதும் 5 லட்சம் பரிசுடனேயே சென்றார்.
இந்நிலையில் அவருக்கு அடுத்ததாக ஜாம்பி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஹிட் கொடுக்கவில்லை. என்ன தான் ரசிகர்கள் இருந்தாலும் படம் ஓடினால் தானே சினிமா துறையில் நிலைக்க முடியும். அது யாஷிகாவிற்கு சிரமமாகவே இருந்தது.
எப்படியாவது ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து பல முயற்சிகளில் ஈடுபட்டும் வருகிறார். குத்து பாடலுக்கு நடனமாடுவது, முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பது என பலவும் செய்து வந்தார். இந்நிலையில் அவர் ரோஜா சீரியலில் கூட முக்கிய வேடத்தில் சில நாட்கள் நடித்தார்.
எதுவுமே அவருக்கு கைகொடுக்காத நிலையில் தற்போது போட்டோஷூட்டை கையில் எடுத்துள்ளார். இதனால் லாக்டவுன் சமயத்தில் இருந்தே பல புகைப்படங்களை வெளியிட்டும் வந்தார்.
இவரின் புகைப்படங்களுக்கே பல ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குட்டை பாவாடையுடன் கடற்கரையில் நின்றவாறு போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா. பலரும் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.