பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான யாஷிகா ஆனந்த் தற்போது சேலையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாஷிகா
‘இருட்டு அறையில் முரட்டு கூத்து’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் யாஷிகா. அதன் பிறகு துருவங்கள் பதினாறு என்ற படத்திலும் நடித்திருந்தார்.
டேஸ்டியான ஈவினிங் ஸ்னாக்ஸ் “பன்னீர் பாப்கார்ன்” – குழந்தைகள் விரும்பும் ரெசிபி!!
சிறு வயதிலேயே நடிப்பில் இருந்த ஆசையால் பல முயற்சிகளுக்கு பின் படங்களில் நடிக்க தொடங்கினார். ஆனால் அவருக்கு திரையுலகில் எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இருட்டு அறையில் முரட்டு கூத்து திரைப்படம் தான் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அந்த வீட்டில் மகத்துடன் இவர் போட்ட ஆட்டத்திற்கு அளவே இல்லாமல் போனது. இதனால் ரசிகர்கள் பலரும் கொந்தளிக்க தான் செய்தனர். ஆனால் வீட்டை விட்டு வெளியேறிய யாஷிகாவுக்கு படவாய்ப்புகள் கிடைக்காததால் திணறி வந்தார்.
பயில்வானுக்கு செம மாத்து விட்ட சிரஞ்சீவி – ஆடுன ஆட்டம் சும்மாவா??
அப்பொழுது அவர் கையில் எடுத்த ஆயுதம் தான் போட்டோஷூட். லாக்டவுன் சமயத்தில் இருந்து அவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அடிமை என்று தான் சொல்ல வேண்டும். எப்படியோ தற்போது 3 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார் யாஷிகா.
ஆனாலும் போட்டோஷூட்டை மட்டும் யாஷிகா நிறுத்திய பாடில்லை. ஏனென்றால் இதற்கு பிறகு தான் ரசிகர்களின் ஆதரவு தேவைப்படும். தற்போது யாஷிகா பச்சை நிற சேலையில் குடும்ப பாங்காக போஸ் கொடுத்திருந்தாலும் கவர்ச்சி எட்டி பார்க்க தான் செய்கிறது. இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.