யாஷிகா ஆனந்த், சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் சிக்கி பரிதாபமான நிலையில் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். இவரது தோழி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். யாஷிகாவிற்கு தற்போது அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு நார்மல் வார்டிற்கு மாற்றபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிர்ச்சியான செய்தி எதையும் யாஷிவிடம் கூற கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறித்தியதால் இவ்வளவு நாட்கள் கழித்து தற்போது தான் தன் தோழி இறந்த விஷயம் யாஷிகாவிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த யாஷிகா முதல் முறையாக தனது தோழி இறந்ததை பற்றி தன் இன்ஸ்டா பதிவில் பேசியுள்ளார்.
யாஷிகா தனது இன்ஸ்டா பதிவில் கூறியதாவது, “என் மனது தற்போது என்ன நிலையில் இருக்கிறது என்பதை வார்த்தையால் விவரிக்க முடியவில்லை. நான் குற்ற உணர்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான் என் உயிர் தோழியின் குடும்பத்தை மிகவும் மோசமான சூழலுக்கு உள்ளாகிவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் யாஷிகாவின் பிறந்த நாள் நாளை (04 ஆகஸ்ட்) என்பதால் தன் ரசிகர்கள் யாரும் தன் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். தன்னுடைய இன்ஸ்டா டிபி யையும் யாஷிகா நீக்கியுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்