ஜீ தமிழில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்?? 1200 எபிசோடுகள் கடந்து சாதனை!!

0

ஜீ தமிழில் தற்போது ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் யாரடி நீ மோகினி சீரியல் முடிவடையுள்ளதாக நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாரடி நீ மோகினி

யாரடி மோகினி சீரியல் ஒரு திகில் தொடராக ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. முத்தரசனின் முதல் மனைவி தான் இந்த சீரியலில் ஆவியாக இருப்பது. அநியாயமாக பணத்திற்காக அவரை கொலை செய்து தற்போது முத்தரசனை காப்பாற்ற ஆவியாக சுற்றி வருகிறார்.

இதில் பயங்கர வில்லியாக சுவேதா செய்யும் செயல்கள் யாவும் பலரையும் வியக்க வைக்கிறது. முத்தரசனை அடைந்தே தீர வேண்டும் என்று பல வேளைகளை செய்து வருகிறார். இதில் வெண்ணிலா வேறு மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார்.

படத்திற்காக தர லோக்கல் கெட்டப்பிற்கு மாறிய அஸ்வின் – விஜய்க்கே சவால் விடுவாரு போலையே!!

எப்பொழுது முத்தரசனுக்கு அவரது சித்தி பற்றி உண்மை தெரியவரும் என்றும் சஸ்பேன்ஸாக உள்ளது. மேலும் மக்களுக்கு பிடித்தமான சீரியலாக ஆரம்பத்தில் இருந்த இந்த சீரியல் தற்போது மக்களை கடுப்பாக்கியும் வருகிறது.

கதையே இல்லாமல் சீரியல் ஓடிக்கொண்டுள்ளது. இதிலேயே அவர்கள் 1200 வரை ஓடி சாதனை படைத்துள்ளனர். மேலும் சீரியல் முடிய போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here