யார்க்கர் கிங் என மக்களை அன்புடன் அழைக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் நடராஜனுக்கு அவரது மனைவி புதிய பட்டமிட்டு சமூகவலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது.
யார்க்கர் கிங்:
இந்திய கிரிக்கெட் விளையாட்டுக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. யார்க்கர் கிங் என்று பெயர் பெற்று இருக்கும் தமிழக வீரர் நடராஜன் தனது பவுலிங்கில் காட்டிய வேரியேஷன் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஆட்டத்தில் நடராஜனின் பங்களிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாது அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.
சிறந்த பவுலர் மட்டும் அல்லாமல் அவர் சிறந்த கணவர் என்றும் நிரூபித்து வருகிறார். தனது பள்ளி தோழியான பவித்ராவை திருமணம் செய்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் திருமண நாளை கொண்டாடும் வகையில் நடராஜனின் மனைவி பவித்ரா இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
“நம் வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களை ஒன்றாகப் பகிர்ந்துகொள்கிறோம். உங்களது புன்னகை இன்னும் என்னை உருகவைக்கிறது. என் வாழ்க்கையின் காதலுக்குத் திருமண நாள் வாழ்த்துக்கள்” என நடராஜனின் மனைவி பவித்ரா வாழ்த்துக்கள் கூறியதுடன் அவர் புன்னகை மன்னன் எனவும் செல்லமாய் கூறியுள்ளார். யார்க்கர் கிங் என்ற பட்டம் மாஸ் ஆக இருந்தாலும் புன்னகை மன்னன் குயூடாக உள்ளது என ரசிகர்களால் கூறப்படுகிறது.