WTT டேபிள் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் மணிகா பத்ரா, சத்யன் ஞானசேகரன் ஜோடி ஹங்கேரி வீரர்களை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
WTT டேபிள் டென்னிஸ்:
கடந்த அக்டோபர் 31ம் தேதி முதல் ஸ்லோவேனிய நோவா கோரிகாவில் உலக டேபிள் டென்னிஸ் (WTT) சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. இதில், கலப்பு இரட்டையர்க்கான போட்டியில் இந்தியாவின், மணிகா பத்ரா, சத்யன் ஞானசேகரன், ஹங்கேரியின் டோரா மதராஸ் மற்றும் நந்தோர் எசெக்கியை எதிர்கொண்டனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த போட்டியில், முதல் செட்டை இந்திய ஜோடி 11-6 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றியதை அடுத்து, ஹங்கேரியை ஜோடி 2 வது செட்டை (8-11) வென்றது. இதனை தொடர்ந்து, தொடங்கிய 3வது மற்றும் 4வது செட்டை இரு அணிகளும் தலா ஒரு செட்டில் 11-6, 9-11 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றனர்.
ஹைலோ ஓபன் பேட்மிண்டன்: அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய ஜோடி…, கிடாம்பி ஸ்ரீகாந்த் அசத்தல் ஆட்டம்!!
இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் 5 வது செட்டுக்கு போட்டி நகர்ந்தது. இதில், இந்திய ஜோடி கடுமையாக போராடி 12-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த இந்திய ஜோடி இறுதி போட்டியிலும் வென்று பதக்கத்துடன் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.