உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தயாராகும் வகையில், இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா முன்கூட்டியே இங்கிலாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெஸ்ட்:
சர்வதேச இந்திய வீரர்கள் பலர், தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர். இவர்கள் ஐபிஎல் தொடரை முடித்த பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர்கள் அனைவரும் தயாராக உள்ளனர். இந்த WTC இறுதிப் போட்டியானது, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே வரும் ஜூன் 7ம் தேதி முதல், இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதற்கு ஐபிஎல் தொடரில், இடம் பெறாத, இந்தியாவின் சேதேஷ்வர் புஜாரா, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், பாட் கம்மின்ஸ் உள்ளிட்ட பலர் தற்போது இருந்தே தங்களது பயிற்சியை தொடங்கி உள்ளனர். இவர்கள் தங்களது பயிற்சியை சிறப்பாக கட்டமைக்கும் வகையில், கவுண்டி சாம்பியன்ஷிப் எனப்படும் முதல் தர கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளனர்.
இந்திய அணியில் இணைய பிசிசிஐ வெளியிட்ட விண்ணப்பம்…, என்னென்ன தகுதிகள் தேவை?? முழு விவரம் உள்ளே!!
இந்த தொடரானது, 18 அணிகளுக்கு இடையே வரும் மே 4ம் தேதி முதல் இங்கிலாந்தில் உள்ள பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு அனைத்து போட்டிகளும் நடைபெற இருக்கிறது. இதில், சசெக்ஸ் அணிக்காக சேதேஷ்வர் புஜாரா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் இணைந்து 3 போட்டிகளில் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.