சிறையில் புரோட்டீன் ஷேக், உடற்பயிற்சி பட்டைகள் கேட்ட மல்யுத்த வீரர்

0

சக வீரரான ராணா தன்கட் கொலைவழக்கில் கைது செய்யப்பட்ட சுஷில் குமார் சிறையில் புரோட்டீன் ஷேக், உடற்பயிற்சி பட்டைகள் தேவை என மனு அளித்துள்ளார். அது குறித்த முடிவுகள் புதன்கிழமை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுஷில் குமார்:

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றவர் சுஷில் குமார். இவருக்கும் சக வீரரான ராணா தன்கட்டுக்கும் இடையே நீண்ட நாட்களாக வாக்குவாதங்கள் இருந்துவந்த நிலையில் சமீபத்தில் ராணா தன்கட் தரப்புக்கும், சுஷில் குமார் தரப்புக்கும் டெல்லியில் திடீரென மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பினர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மருத்துவ பலனின்றி உயிரிழந்தார். ராணா தன்கட் மரணத்தை தொடர்ந்து சுஷில் குமார் மீது போலீஸார் வழக்கு தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில் குமார், வரவிருக்கும் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தயாராகி வருவதால் புரதச் சத்துகள், உடற்பயிற்சி பட்டைகள் மற்றும் சிறப்பு உணவு ஆகியவற்றைக் கோரியுள்ளார். மேலும் சிறப்பு உணவின் கீழ், சுஷில் குமார் ஒமேகா 3 காப்ஸ்யூல்கள், ஒர்க்அவுட் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் மல்டிவைட்டமின் மாத்திரைகள் போன்றவற்றை விரும்புகிறார். சுஷில் குமாரின் மனு குறித்து நீதிமன்றம் புதன்கிழமை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here