மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், UP வாரியர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணியானது இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேறி உள்ளது.
WPL 2023:
மகளிருக்கான பிரீமியர் லீக் (WPL) தொடரில், நேற்று டெல்லி கேபிடல்ஸ் அணியானது, இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்பில், UP வாரியர்ஸ் அணிக்கு எதிராக மோதியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதன் விளைவாக, UP வாரியர்ஸ் அணியானது, பேட்டிங் செய்ய களமிறங்கியது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதில், கேப்டன் அலிசா ஹீலி (36) மற்றும் ஸ்வேதா செஹ்ராவத் (19) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். இதனால், UP வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்தது. இதில், அதிகபட்சமாக தஹ்லியா மெக்ராத் மட்டும் 58* ரன்களுடன் களத்தில் இருந்தார்.
பப்லு ப்ரித்விராஜ் – ஷீத்தல் தம்பதியருக்கு விரைவில் டும் டும் டும்.., இணையத்தில் கசிந்த தகவல்!!
இதையடுத்து, 139 ரன்களை துரத்திய டெல்லி அணியில், முதல் விக்கெட்டுக்கே 56 ரன்கள் குவித்து அசத்தி இருந்தனர். மெக் லானிங் (39), ஷஃபாலி வர்மா (21), ஆலிஸ் கேப்ஸி (34) மற்றும் மரிசான் கேப் (34*) என டெல்லி வீராங்கனைகள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, 17.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இதன் மூலம், நேரடியாக டெல்லி கேபிடல்ஸ் அணி மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. எலிமினேட்டர் சுற்றில், மும்பை அணியானது, UP வாரியர்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.