மந்தனாவின் RCB அணியானது, UP வாரியர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் வெற்றியை பெற்றுள்ளது.
WPL:
இந்தியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், நேற்று மந்தனாவின் RCB அணியானது, UP வாரியர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில், டாஸ் வென்ற RCB அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய UP வாரியர்ஸ் அணியானது, RCBயின் எல்லிஸ் பெர்ரி, சோபனா ஆஷா மற்றும் சோஃபி டெவின் ஆகியோரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனால், UP வாரியர்ஸ் அணியானது 19.3 ஓவர் முடிவில் 135 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 46 ரன்களை எடுத்திருந்தார். இதையடுத்து, 136 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற எளிய இலக்கை துரத்த RCB அணி களமிறங்கியது. கேப்டனான மந்தனா வந்த வேகத்தில் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை தந்தார்.
எதிர்நீச்சல் சீரியல் மருமகள்களா இது.., நம்பவே முடியாலையேப்பா.., வைரலாகும் Unseen போட்டோ!!!
ஆனால், RCBயின் மற்ற வீராங்கனைகள் பொறுப்புடன் விளையாடி, 18 ஓவரிலேயே இலக்கை அடைந்து இந்த WPLலில் முதல் வெற்றியை பெற்றுத்தனர். இதில், RCB சார்பாக, கனிகா அஹுஜா 46, ரிச்சா கோஷ் 31*, ஹீதர் நைட் 24 ரன்கள் எடுத்து RCB அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். இந்த போட்டி மூலம், RCB அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் முதல் வெற்றியை பெற்று, வெற்றி பாதைக்கு திரும்பி உள்ளனர்.