மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில், மந்தனா தலைமையிலான RCB அணியானது UP வாரியர்ஸ் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
WPL:
மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரின் முதல் சீசன் இந்தியாவின் மும்பையில் நடைபெற்று வருகிறது. 5 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், நேற்று மந்தனா தலைமையிலான RCB அணியானது, அலிசா ஹீலி தலைமையிலான UP வாரியர்ஸ் அணியை எதிர்த்து போட்டியிட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த போட்டி மூலம் WPL லில் தனது முதல் வெற்றியை பெறும் முனைப்பில் RCB அணி களமிறங்கியது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய, RCB அணியில், எல்லிஸ் பெர்ரி (52) மற்றும் சோஃபி டெவின் (36) மட்டும் நிலைத்து விளையாட மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், RCB அணியானது, 19.3 ஓவரில் 138 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
விஜய் 18 வயசுல எங்கட்ட இத சொன்னாரு., நானும் எஸ்ஏசி-யும் உறைஞ்சுட்டோம்! ஷோபா உருக்கம்!!
இதனை தொடர்ந்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் UP வாரியர்ஸ் அணி களமிறங்கியது. இதில், தொடக்க வீராங்கனைகளான தேவிகா வைத்யா (36*) மற்றும் அலிசா ஹீலி (96*) அதிரடியாக விளையாடி இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இதன் மூலம், 10 விக்கெட் வித்தியாசத்தில், RCB அணியானது மீண்டும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த WPL லில் RCB அணியானது இதுவரை விளையாடி உள்ள 4 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.